நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலை அடுத்து தெரிவாகியுள்ள புதிய அரசின் சார்பில் தெரிவாகும் புதிய அமைச்சர்கள் சற்று நேரத்தில் பதிவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இன்று மு.பகல் 8.30 மணிக்கு கண்டி மங்குல் மடுவவில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான பொதுஜன முன்னணி 145 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து புதிய பிரமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டதை அடுத்து தனது கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை